2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த கணவன்

Freelancer   / 2025 ஜூன் 09 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாப்பிட்டிய - வல்பிடகம பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு 44 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். 

கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் குறித்த பெண் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .