2025 ஜூன் 09, திங்கட்கிழமை

2029 பொதுத்தேர்தலில் ஹரிணி: ரணில் காய்நகர்த்தல்

Editorial   / 2025 ஜூன் 09 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை  பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டங்களை தீட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி அ​மரசூரியவை நீக்கிவிட்டு, மேலதிக நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்லது பிரதமர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்தவோ, அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என ​அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடந்தவார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எனினும், 2029 ஆம் ஆண்டு ​பொது வேட்பாளராக தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பும் ஹரிணி அமரசூரிய தரப்பினரும் எவ்விதமான கலந்துரையாடல்களிலும் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .