2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ரயர் கடையில் கொள்ளை; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கல்முனை பெரியநீலாவணை பிரதேசத்தில் ரயர் கடையொன்றில் கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும்  ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்

நேற்று வெள்ளிக்கிழமை இரவு பெரியநீலாவணை பிரதான வீதியிலுள்ள ரயர் கடையின் கூரையை உடைத்துக்கொண்டு
கொள்ளையர்கள் இருவர் உள்நுழைந்ததாக கிடைத்த தகவலையடுத்து, குறித்த இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

இதன்போது, ஒருவர் தப்பியோடியுள்ள அதேவேளை, ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இருவரும் அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தெரிய வந்துள்ளது.  தப்பியோடிய மற்றையவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .