2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தென்கிழக்கு பல்கலையின் சர்வதேச ஆய்வரங்கு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச ஆய்வரங்கின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

'விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஊடாக யுத்தத்துக்குப் பின்னரான பொருளாதார அபிவிருத்தி' எனும் தலைப்பில் இடம்பெறும் இந்த ஆய்வரங்கு எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ரொஹான் ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அச்சி முகம்மது இஸ்ஹாக் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வரங்கில் இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பங்குபற்றுனர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .