Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
துரைவந்தியமேடு கிராமத்தின் பிரதான வீதி சேதமடைந்து காணப்படுவதால், அந்த வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமமானது, கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியிலிருந்து கிட்டத்தட்ட 04 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் அம்பாறை மாவட்டத்தின் கடைசிக் கிராமமும் ஆகும்.
ஒரு தீவு போல் காணப்படும் இந்தக் கிராமத்துக்கு சென்று வருதற்கு வடக்குப் புறமாக ஒரு வீதியும் தெற்குப் புறமாக ஒரு வீதியுமாக இரண்டு பிரதான வீதிகளே உள்ளன. இந்த இரு பிரதான வீதிகளில் துறைநீலாவணையிலிருந்து துரைவந்தியமேட்டுக்குச் செல்லும் பிரதான வீதி மிகவும் சேதடைந்து காணப்படுகின்றது.
ஏற்கெனவே குன்றும் குழியுமாகக் காணப்பட்ட இந்த வீதி, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பயணிப்பதற்கு சிரமமாகவுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாரமான பொருட்களுடன் சைக்கிளில் பயணிப்போர் சைக்கிள்களை ஓட்டமுடியாத நிலையில் தள்ளிக்கொண்டு செல்கின்றனர். எனவே, உரியவர்கள் தலையிட்டு இந்த வீதியை உடனடியாக புனரமைத்துத் தருமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
MIM Ilyas Saturday, 23 April 2011 04:45 AM
கல்முனை மாநகர சபை எதை உருப்படியா......!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
59 minute ago
1 hours ago