Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பிலுவில், முனையக்காடு சென்றல் வீதியில் உள்ள கூலிதொழில் செய்யும் 40 வயதான மேற்படி சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மனைவியுடன் தகராரில் ஈடுபட்டு அவரை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார்.
இதனையடுத்து வீட்டில் தனிமையிலிருந்த 14 வயது மகளின் கை, கால்களை கயிற்றினால் கட்டி வாயினுள் துணிகளை அடைத்த நிலையில் துஷ்பிரயோகம் செய்யமுற்பட்டுள்ளார். இதன்போது மனைவி வீட்டுக்கு வந்ததையடுத்து சந்தேகநபர் வீட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்த நேற்றிரவு சந்தேகநபர் திருக்கோவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
55 minute ago
59 minute ago