2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பொத்துவில் கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்காக திறக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

நீண்ட காலமாக மூடப்பட்ட நிலையில் பாழடைந்து கிடக்கும் பொத்துவில் கலாசார மண்டபத்தினை பொது மக்களின் உபயோகத்துக்கு வழங்குமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த 1999ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சரும், மு.கா. தலைவருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பினால் அடிக்கல் நடப்பட்ட இக்கலாசார மண்டபம், கடந்த 2009ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மண்டபம் - பொத்துவில் ஜும்ஆப் பள்ளிவாசலினால் பராமரிக்கப்பட்டு வந்தது.

ஆயினும், தமக்குச் சொந்தமான காணியில் இந்தக் கட்டிடம் அமையப் பெற்றுள்ளதால், மேற்படி கலாசார மண்டபம் தமக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து 'முஸ்லிம் கலாசார சங்கம்' எனும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தது.

அந்த வழக்கின் பிரகாரம், குறித்த கலாசார மண்டபமும், அது அமைந்துள்ள காணியும் மேற்படி 'முஸ்லிம் கலாசார சங்கத்துக்கே' சொந்தமானது என நீதிமன்றம் தீர்பளித்திருந்தது.

அந்தவகையில் குறித்த சங்கத்தின் பொறுப்பில் மேற்படி கலாசார மண்டபம் வந்துள்ளபோதும், இதை இன்னும் அவர்கள் திறந்து – மக்களின் பாவனைக்கு வழங்கவில்லை என்றும் பொத்துவில் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இதனால், இக்கலாசார மண்டபம் பாழடைந்து வெளவால்கள் தங்குமிடமாக மாறி வருவதோடு, கட்டிடத்தின் சுற்றுப்புறங்களில் புல் மற்றும் பற்றைகள் வளர்ந்து வருவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, மேற்படி கலாசார மண்டபத்தினை பொதுமக்களின் உபயோகத்துக்கு வழங்க உரியவர்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .