Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், எம்.சி.அன்சார்)
கிழக்கு மாகாணத்தில் 1131 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாகவும், இவர்களுக்காக மாதமொன்றுக்கு 17 மில்லியன் ரூபாய் சம்பளமாக வழஙகப்படுவதாகவும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குரை தொடர்பாக பல பாடசாலைகளும் கல்வி வலயங்களும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பொத்துவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, கிழக்கு மாகாணத்தில் மேற் கொள்ளவுள்ள ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும், கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகவே எமக்குக் கூறப்பட்டு வந்தது. எந்தப் பாடசாலைக்குச் சென்றாலும், அங்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகவும், அதை நிவர்த்தி செய்து தருமாறுமே எம்மிடம் வேண்டுகோள்கள் விடப்பட்டன.
பாடசாலைகளும், கல்வி வலயங்களும் தருகின்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே ஆசிரியர்கள் பற்றிய தொகை மதிப்பீட்டை நாம் மேற்கொள்வதுண்டு. ஆனால், அநேகமான பாடசாலை நிருவாகங்களும், கல்வி வயலயங்களும் ஆசியர் கணக்கெடுப்புத் தொடர்பில் எமக்குப் பிழையான தகவல்களையே வழங்கி வந்திருக்கின்றன. அந்தத் தகவல்களின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 1000 முதல் 1500 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்பட்டது.
ஆனால், ஒவ்வொரு வலயத்துக்கும் அண்மையில் நாம் நேரடியாகச் சென்று அந்தந்த வலயங்களில் சம்பளம் பெறுகின்ற ஆசிரியர்களைக் கணக்கெடுக்கும் அதிரடி நடவடிக்கையொன்றில் இறங்கினோம். அதன்போது, எமக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தகவல்கள் பிழையானவை என்பதை நாம் அறிந்து கொண்டோம். கிழக்கு மாகாணத்தில் சுமார் 2254 ஆசிரியர்களின் தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்தமையை அதன்போது நாம் கண்டுபிடித்தோம்.
இவ்வாறு நாம் நேரடியாகப் பெற்றுக் கொண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த கணக்கெடுப்பின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் 1131 மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர் என்பதை அறிந்து கொண்டோம்.
எனவே, மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை வலயத்துக்குள், வலயத்துக்கு வெளியில் என்கிற இரண்டு முறையில் நாம் இடமாற்றம் செய்யவுள்ளோம். மேலும் இந்த இடமாற்றம் ஒழுங்கு மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த இடமாற்றம் என்னுடைய திட்டமல்ல. ஆளுநரின் கட்டளைக்கிணங்கவே இந்த இடமாற்றம் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரின் அங்கீகாரமும் இந்த இடமாற்றத்துக்குக் கிடைத்திருக்கின்றன. எதிர்வரும் மே மாதத்துக்குள் இந்த இடமாற்றங்கள் செய்து முடிக்கப்படும் என்றார்.
இதேவேளை, ஆசிரியர் தொகை மதிப்பீடு தொடர்பில் பிழையான தகவல்களை வழங்கியோருக்குத் தண்டனை வழங்கப்படுமா? என – மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பணிப்பாளர் பதிலளிக்கையில், இது தொடர்பில் பிழையான தகவல்களை வழங்கியவர்களை உடனடியாகத் தண்டிக்கும் படி ஆளுநர் என்னைப் பணித்திருந்தார். நிச்சயமாக அதிபர்கள் முதல் இதனோடு தொடர்புபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். ஏற்கனவே பிழையான தகவல்களை வழங்கிய – சிலரின் சம்பளம் மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவைகளை நாம் நிறுத்தி வைத்துள்ளோம் எனக் கூறினார்.
ameer Thursday, 28 April 2011 10:33 PM
சாதனை வீரன் ஆகின்ற நினைப்பில் மண் கவ்வப் போகிறார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
51 minute ago
2 hours ago