2025 ஜூன் 09, திங்கட்கிழமை

எல்லை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் பின் பெயர்ப்பலகையிட அனுமதி: பொத்துவில் பிரதேச சபை தவிசாளர்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

பொத்துவில் பிரதேசம் தற்போது எல்லைப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. கடல் பகுதி தவிர்ந்த ஏனைய மூன்று திசைகளிலும் பொத்துவில் பிரதேசம் எல்லைப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது. அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் பொத்துவில் எல்லைகளில் பெயர்ப்பலகையிட வேண்டுமெனக் கூறி அதற்கான அனுமதியை பிரதேசசபையிடம் கோரினர். ஆனால், பொத்துவிலின் எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தெளிவு பெற்ற பின்னரே  பெயர்ப்பலகையிட அனுமதிக்கப்படுமென தாம் கூறியதாக  பொத்துவில் பிரதேசசபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாசித் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று பொத்துவிலுள்ள ஹோட்டலொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே, அவர்; இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவில் பிரதேசமானது சுகாதாரம், கல்வி ஆகிய விடயங்களில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ளது. இங்குள்ள மாவட்ட ஆதார வைத்தியசாலையில் பிரேத அறை இல்லை, பிரேத பரிசோதனை அதிகாரி இல்லை. இதனால், பொத்துவிலில்; மரணித்த ஒருவரின் சடலத்தை 100 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மட்டக்களப்புக்கு அனுப்பி அங்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டியதொரு நிலையேற்பட்டது.

இவை தவிர, பொத்துவில் பிரதேச பாடசாலைகளும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளன. வெளியூர்களிலிருந்து இங்கு வரும் ஆசிரியர்கள்  குறுங்காலத்தில் இடம்மாற்றம் பெற்றுச் செல்கின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே  பொத்துவில் பிரச்சினைகளை வெளியுலகுக்குக் கொண்டு வரப்படவேண்டும். அதனூடாக எமது பிரதேசத்தின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுமென்று நம்புகிறேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .