2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தின்போது ஆண் - பெண் பாகுபாடு இல்லை

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

 

கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 21 ஆயிரம் ஆசிரியர்களில் 68 வீதமானோர் பெண் ஆசிரியர்களாவர். எனவே, கிழக்கு மாகாணப் பாடசாலைகளிலுள்ள மேலதிக ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் போது ஆண் - பெண் பாகுபாடுகள் பார்க்கப்பட மாட்டாது என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

மே மாதம் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஆசியர் இடமாற்றம் குறித்து ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் போதே பணிப்பாளர் நிஸாம் இவ்வாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்ளூ

ஆசிரியத் தொழிலைப் பொறுத்தவரையில் சம்பளம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ஆண் - பெண் பால் சமநிலை பேணப்படுகிறது. எனவே, இடமாற்றம் எனும் விடயத்திலும் இது கடைப்பிடிக்கப்படும்.

ஆண் ஆசிரியர்களுக்கு பிரயோகிக்கப்படும் ஒழுங்கு முறை மற்றும் நிபந்தனைகள் போன்றவை இடமாற்ற விடயத்தில் பெண் ஆசிரியர்களுக்கும் பிரயோகிக்கப்படும்.

எவ்வாறிருந்தபோதும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் இந்த இடமாற்றத்தின் போது, அவர்களின் இருப்பிடங்களிலிருந்து அண்மையிலுள்ள பாடசாலைகளுக்கோ, வலயங்களுக்கோ இடமாற்றம் செய்யப்படுவர்.

இதேவேளை, பிரசவ விடுமுறையிலுள்ள ஆசிரியைகளுக்கு – குறித்த விடுமுறைக் காலம் நிறைவடையும் திகதியிலிருந்தே அவர்களுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.


You May Also Like

  Comments - 0

  • Ameen Friday, 29 April 2011 12:06 AM

    இடமாற்றம் நேற்று நிந்தவூரில் ஆரம்பமாகி கல்முனை வரை தொடர்ந்தது. இன்று திருமலையில் தொடர்கிறது.
    நாளை கொழும்பு வரை தொடருமா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .