2025 ஜூன் 09, திங்கட்கிழமை

திருக்கோவிலில் விவசாயி ஒருவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில், தாமரைக்குளம் பிரதேசத்திலிருந்து விவசாயி ஒருவரின் சடலம் படுகாயங்களுடன் நேற்று இரவு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவிலில் உள்ள தனது வீட்டிலிருந்து தங்கவேலாயுதபுரத்திற்கு விவசாய நடவடிக்கைக்காக சம்பவதினம் இரவு 7.30 மணிக்கு சைக்கிளில் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில், திருக்கோவில் 4ஆம் பிரிவைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான கந்தையா தங்கவேல் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளவராவார்.

இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை, பிரேத பரிசோதனைகளை அடுத்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .