2025 ஜூன் 09, திங்கட்கிழமை

நிந்தவூர் விவசாயிகளுக்கு இலவச விதைநெல்

Suganthini Ratnam   / 2011 மே 05 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் பிரதேச விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவற்கும் விதைநெல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாகவும் உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் இலவசமாக விதைநெல் வழங்கப்பட்டது.

நிந்தவூர் கமநலசேவை மத்திய நிலையத்தில் அதன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உணவு விவசாய ஸ்தாபனத்தின் இணைப்பாளர் பி.மார்கண்டு, கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஹரீஸ், தலைமை காரியாலய பெரும்போக உத்தியோகத்தர் எஸ்.எம்.எஸ்.பாறூன் மௌனானா, நிந்தவூர் பிரதேச செயளாலர் ஐ.எம்.ஹனீபா, கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் டி.எம்.என்.திஸாநாயக்க, விவசாய போதனாசிரியர்களான எம்.வை.எம்.நியாஸ், ஜே.எம்.பாசில் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .