2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனையூரான் பதீ எழுதிய தூது வரும் தேர்தல்; தீர்வு தேடும் பார்வை நூல் வெளியீட்டு விழா

Super User   / 2011 மே 07 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

மர்ஹும் எஸ்.ரி. உஸ்மான் ஸாஹிப் நினைவாக தாரிக்கே மில்லத் பதிப்பகத்தின் இரண்டாவது வெளயீடான கல்முனையூரான் பதீ யூ.எல்.பதீஉஸ் ஸமான் எழுதிய "தூது வரும் தேர்தல்; தீர்வு தேடும் பார்வை" நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் நடைபெற்றது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னால் உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.அப்துல் காதர் பிரதம அதிதியாகவும் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அதிபரான வரலாற்றில் ஓர் ஏடு புகழ் கலாபூஷணம் கவிமணி எம்.எச்.எம்.புகாரி பலாஹி விஷேட அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் விரிவுரையாளரான ஏ.ஜே.எல்.வஸீல் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

நூலின் முதற்பிரதியை பிரதம அதிதியிடமிருந்து கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் பெற்றுக்கொண்டார். இந்த நூல் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .