Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 11 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கடந்தகால யுத்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த 800 குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கான நிதி மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இம்மக்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படுவார்களென திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.அழகரெத்தினம் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் அந்த மாவட்ட கச்சேரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது உணவு மற்றும் போசாக்கு அமைச்சர் பி.தயாரட்ன, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கஞ்சி;குடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் கிராமங்களைச் சேர்ந்த மக்களை மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக விளக்கமளித்த அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா,
இப்பிரதேசத்திற்கான வீதிகள் பொத்துவில் பிரதான வீதியிலிருந்து தங்கவேலாயுதபுரம் கஞ்சி;குடிச்சாறு வரை புனரமைக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
எனினும், மக்களை மீள்குடியேற்றுவதற்கு தேவையான நிதியை மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரியுள்ளோம். நிதி வழங்கப்பட்டதும் உடனடியாக இடம்பெயர் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்களென அவர் தெரிவித்தார்
இதேவேளை, கடந்த 2007ஆம் ஆண்டு இக்கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து திருக்கோவில், தம்பிலுவில், விநாயகபுரம், தாண்டியடி போன்ற பிரதேசங்களிலுள்ள உறவினர் வீடுகளில் பல்வேறு சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago