2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்ட கடற்றொழில் அமைப்பின் அங்குரார்ப்பண கூட்டம்

Menaka Mookandi   / 2011 மே 12 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கிராமிய கடற்றொழில் அமைப்பு நிருவாகிகள் கலந்து கொள்ளும் அம்பாறை மாவட்ட கடற்றொழில் அமைப்பின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று பிற்பகல் முதல் கல்முனை பொலிஸ்நிலைய வீதி, கத்தோலிக்க மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

மேற்படி அங்குரார்ப்பணக் கூட்டம் இரண்டு நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதல் நிகழ்வில் அமைப்பின் நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.ஏ.குலதுங்க முன்னிலை வகித்தார். இரண்டாவது நிகழ்வில் மீனவர்களுக்கான கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதன்போது கடற்றொழில் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைப்பார். இந்நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .