2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மீனவர்களுக்கு ஓய்வூதியம்; புதிய திட்டம் அமுல் என்கிறார் அமைச்சர் ராஜித

Menaka Mookandi   / 2011 மே 12 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

மீன்பிடித் தொழிலாளர்கள் 60 வயதினை அடையும் போது அவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாவினை ஓய்வூதியமாக வழங்கும் திட்டமொன்றை தாம் மேற்கொண்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட கடற்றொழில் அமைப்பின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று பிற்பகல் கல்முனை பொலிஸ் நிலைய வீதி, கத்தோலிக்க மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்...,

'தேசிய கடற்றொழில் மகாசங்கத்தில் அங்கத்துவம் பெறுகின்ற கடற்றொழிலாளர்களுக்கென நாம் பல்வேறு நன்மைகளை வழங்கவுள்ளோம். அந்தவகையில் கடற்றொழில் மகாசங்கத்தின் அங்கத்தவர்களுக்கென காப்புறுதித் திட்டமொன்றினையும் வகுத்துள்ளோம்.

அந்தக் காப்புறுதித் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் மீனவரொருவர் மரணமடையும்போது ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரையில் காப்புறுதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல், மீன்பிடித் தொழிலாளர்கள் 60 வயதினை அடையும் போது அவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாவினை ஓய்வூதியமாக வழங்கும் திட்டமொன்றையும் நாம் மேற்கொண்டுள்ளோம். ஓய்வூதியத்தினைப் பெற்றுவந்த மீனவர் இறக்கும் பட்சத்தில் அந்த ஓய்வூதியத் தொகை அவர்களின் மனைவியர்க்கு வழங்கப்படும்' என்றார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் சிரானி ஆகியோருடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜெமீல் மற்றும் அப்துல் ஜவாத், கல்முனை மாநகரசபைத் தலைவர் மசூர் மௌலானா மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .