Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 28 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
கல்முனை மாநகரச சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் கொள்கையின்படி, சபையிலுள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரினார்.
கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது. அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்களும் இச்சபைக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த தலைவர் அஷ்ரபின் கொள்கையானது, எதிர்கட்சி என்றில்லாமல், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் பொது இலக்கிற்காக இணைந்து செயற்படும் ஜனநாயகமாகும் என அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண வைபவம் கொழும்பிலுள் நீதியமைச்சில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கல்முனை மாநகரசபையிலுள்ள தமது கட்சி உறுப்பினர்களைப் போலவே எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் நடத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவான உறுப்பினர்களை அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தினார். 'இச்சபையை ஏனைய சபைகளுக்கு முன்னுதாரணமாக்குவோம்' என அவர் கூறினார்.
பல் இனத்தவர்கள் கொண்ட கல்முனைப் பிரதேசத்தில் மாநகரசபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வென்றுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் தினத்தன்று அப்பகுதியில் இடம்பெற்ற சிறு மோதல்களுக்கு மத்தியிலும் கட்சி வென்றுள்ளது என்பதையும் விருப்பு வாக்குமுறைமையினால் ஏற்பட்ட இம்மோதல்கள் பெரும் கவலைக்குரியதாகவுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
கல்முனை மாநகச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 11 உறுப்பினர்கள் தெரிவாகினர். அவர்களில் மேயர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதி மேயர் நிஸாம் காரியப்பர் ஆகியோர் ஆளுங்கட்சியின் ஏனைய மாநகர முதல்வர்கள் பிரதி முதல்வர்கள் சகிதம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
uooran Saturday, 29 October 2011 05:04 PM
தலைவரே!
உங்கள் பிரசன்னம் இல்லாமலேயே கல்முனை மக்கள் முஸ்லீம் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளார்கள்இ இது மறைந்த தலைவனுக்காக. இந்தத் தேர்தலில் பிரதேசவாதம் பேசப்பட நீங்கம் ஒரு காரணமே! சரியான நேரத்தில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கததே அந்தக்கரணம்.
ரனிலிடம் இருந்த காலத்திலாவது இதனை கற்று இருக்கலாம். எதையும் கூறாமல் இருந்து நீண்ட அரசியல் பகைக்கான எண்ணையை ஊற்றி வைத்துள்ளீர்கள் வாழ்க. உங்கள் இராஜ தந்திரம் ..................
Reply : 0 0
safa Sunday, 30 October 2011 11:41 PM
நீங்க என்ன சொல்லுறது எல்லா கட்சிகளும் சேர்ந்து செயற்படுங்கள் என்று. சொல்லவில்லை என்றால் சேரமாட்டமா..? என்று இங்க சொல்லுறது சேருங்க சேருங்க என்று... அது பிரிஞ்சே இருந்தால்தானே உங்களுக்கு வாழ்வு... எப்படியோ உலக வாழ்க்கை ஒரு கொசுவின் இறக்கைக்கு சமன் என்பதை மறந்துவிடாதீர்கள். எல்லோருக்கும் மறுமையில் நிச்சயம் ... உண்டு.
Reply : 0 0
hameed Sunday, 30 October 2011 09:21 AM
தம்பி முடிந்த சம்பவம் .. எது ..?
Reply : 0 0
naanum kalmunaiyan Sunday, 30 October 2011 04:38 AM
இங்கு கருத்து தெரிவித்த எல்லாருமே சொல்லுங்க பார்போம், நீங்கள் உத்தமர்களா? ஏன் நீங்கள் முடிந்த பிரச்சனையை இங்கு கிண்டுகிறீர்கள்? வெட்கம் இல்லையா? நீங்கள் முதலில் ஒற்றுமையாக செயற்படுங்கள்....
Reply : 0 0
mca fareed Sunday, 30 October 2011 01:11 AM
தலைவரே சும்மா கொளப்பாத்தீங்க, நீதி அமைச்சர்தானே, உடன், நீதிப்படி நடந்திருந்திருந்தால் ஒருபிரச்சினையும் வந்திருக்காது. பிரதேச குழப்பத்திற்கு நீங்கள் என்றோ ஒருநாள்,பதில் சொல்லத்தான் வேண்டும்.
Reply : 0 0
makkal 1st Sunday, 30 October 2011 12:31 AM
இவரின் 70 வீதமான வியூகங்கள் தோல்வி. 30 வீதமான வியூகங்கள் அரைவாசி தோல்வி.
Reply : 0 0
சிறாஜ் Sunday, 30 October 2011 12:21 AM
தலைவர் நல்வழியிலேயே சொல்கிறார். மப்புடன் செல்லும் சிலரை சிலரின் அடிவருடிகளை என்ன செய்வது தலைவர்? தலைவர் அவரின் வேலையைத்தான் செய்யலாம். அதிலும் புத்தி கெட்டுத்திரியும் சுயநல வாதிகளுக்கு என்ன பதில் சொல்வது...
Reply : 0 0
hameed Saturday, 29 October 2011 10:27 PM
தலைவர் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே ..
Reply : 0 0
hutha Saturday, 29 October 2011 05:46 PM
சாய்ந்தமருது கொதிக்குது தலைவரே.
Reply : 0 0
kalu Saturday, 29 October 2011 04:00 AM
இருக்கு ஆப்பு ....
Reply : 0 0
alilanka Saturday, 29 October 2011 04:49 PM
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மகா நடிகர். இந்த நாட்டில் யாரும் அவரை போல் நடிக்க முடியாது.
Reply : 0 0
meenavan Saturday, 29 October 2011 04:44 PM
அமைச்சரே? நீங்கள் குறிப்பிட்ட சிறு மோதல் உங்களது கட்சியின் உயர்பீட உறுப்பினரிடையே தான் நிகழ்ந்தது. மாற்று கட்சியினரால் நிகழவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். விருப்பு வாக்கு என்பது உங்கள் கட்சிக்கு மாத்திரம் உரியதல்ல என்பதும் மறுக்கமுடியாது.
Reply : 0 0
meenavan Saturday, 29 October 2011 03:34 PM
பண பலம் அடிமட்ட போராளிகளையே வேரறுத்த நிலையில்,பிரதேச வாதம் உச்சமாக, உண்ணாவிரதம் பரிணமிக்க ஏனைய சபைகளுக்கு எவ்வாறு முன்னுதாரனமாக்க முடியும்? கள நிலையோ நீறு பூத்த நெருப்புதான்?
Reply : 0 0
mbm Saturday, 29 October 2011 03:01 PM
தலைமை பேச வேண்டிய பேச்சுதான். இருந்தாலும், நடந்து முடிந்த தேர்தல் காலத்தில் இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே... சாணக்கியமான வசனம் பேசுவது தலைமைத்துவம் அல்ல. சாணக்கியனாக நடந்து காட்டுவதுதான் தலைமைத்துவம்.
Reply : 0 0
razeek kalmunai Saturday, 29 October 2011 02:59 PM
யாருக்கு யார் ஆப்பு வைப்பது .........? இது மறைந்த தலைவரின் யாப்பு..........? இதை மாற்ற முடிமா ........ ? இருக்கு நிசாமுக்கு பாரிய ஆஆஆப்பு ..........
Reply : 0 0
UMMPA Saturday, 29 October 2011 02:33 PM
மறைந்தது ஒரு உண்மை தலைவர் ! நீங்கள் ஒரு கல்முனை மக்களின் விடயத்தில் ஒரு திராணி இல்லாதவர் . எங்களை பிரித்து விட்டிர்கள் . நீங்கள் உடன் பறந்து வந்து மேயர் பதவி சண்டையே இப்போது சொல்லுவதுபோல் அன்று களத்தில் நின்று விளங்கப்படுத்தி இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் எதிரிகள் சற்று பின்வாங்கி இருப்பார்கள் . உங்களுக்கு தேசியப்படியல் உறுப்பினர் தெரிவுக்கு மக்கள் எதிர்த்தால் நீங்கள் அதுபற்றி எதுவும் கண்டுகொள்ளமாட்டிர்கள். இதுதான் முடிவு என்று சொல்லிவிடுவிர்கள்.
Reply : 0 0
hameed Saturday, 29 October 2011 04:35 AM
நல்ல கருத்து. அடங்குவர்களா போராளிகள் ..?. யா ..முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக இருக்க முடியும் நீங்கள் எல்லாரின் இதயங்களும் சுத்தமாக இருந்ந்தால். எங்களை ஒற்றுமையாக இருக்க சொல்லிப்போட்டு நீங்கள் எல்லாம் பதவிகளுக்கு அடிபுடி படுவது ..அசிங்கமாய் இல்லையா?
Reply : 0 0
jowsi Saturday, 29 October 2011 04:33 AM
பிள்ளையையும் கில்லி தொட்டிலும் ஆட்டுகிறார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago