2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 01 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் 05ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாரட்டும் வைபவம் 'ஊக்கத்துக்கு உரமிடுவோம்' எனும் தலைப்பில் நேற்று திங்கட்கிழமை அப்பாடசாலையில் நடைபெற்றது.

விநாயகர் மகாவித்தியாலய அதிபர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக மாகாண அமைச்சர் ரீ.நவரட்ணராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான சீ.செல்வராஜா, எஸ்.புஸ்பராஜா, ஆலையடிவேம்பு பிரதேசசபைத் தவிசாளர் கே.இரத்தினவேல், வலயக்கல்விப் பணிப்பாளர்  தி.கணேசமூர்த்தி மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்


You May Also Like

  Comments - 0

  • faizmohamed Tuesday, 01 November 2011 07:27 PM

    c m நமது பிரதேசங்களில் காணோம்?????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .