2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 01 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார நிலையம் மற்றும் முகம் அழகுபடுத்தும் அலங்கார நிலையம் என்பவற்றில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்துதல் சம்பந்தமாக விழிப்புணர்வுட்டும் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரசேனவின் பணிப்புரையின் பேரில் அம்பாறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகளும் உத்தியோஸ்தர்களும்  சிகை அலங்கார நிலையம் மற்றும் உடல் அழகுபடுத்தும் நிலையங்களிலுள்ள அழகு சாதனப்பொருட்கள் மற்றும் பயன்படுத்தும் உபகரணங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுவருகின்றனர்.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 75 சிகை அலங்கார நிலையங்களும் உடல் அழகுபடுத்தும் நிலையங்களும் காணப்படுகின்றன. சில சிகை அலங்கார நிலையங்களிலும் உடல் அலங்கார நிலையங்களிலும் காலங்கடந்த அழகு சாதனப்பொருட்களும் பாவனைக்கு உதவாத கிருமியளிக்கப்படாத உபகரணங்களும் பாவனையில் இருந்தமை திடீர் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .