2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வலுவிழந்தோருக்கு இடையிலான சித்திரப்போட்டி

Menaka Mookandi   / 2011 நவம்பர் 01 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


சர்வதேச மாற்று ஆற்றல் படைத்தோர் தினத்தை முன்னிட்டு வலுவிழந்தோருக்கிடையிலான சித்திரப்போட்டியொன்றினை நடத்த கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நிதந்தர வதிவிடத்தைக் கொண்ட ஆண் , பெண் மாற்று ஆற்றல் படைத்தவர்கள் இச்சித்திரப் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

”மாற்று ஆற்றல் படைத்தவர்களுக்கு  பொருத்தமான இடத்தை வழங்குவோம்” எனும் தொனிப்பொருளில் அமையவுள்ள இச்சித்திரப் போட்டியில் வரையப்பட்ட சித்திரங்களின் பின்புறத்தில் தமது கிராம சேவக உத்தியோஸ்தரின் கையொப்பத்துடன் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சமூக வேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • neethan Wednesday, 02 November 2011 02:29 PM

    கிழக்கு மாகாண முதலமைச்சர் பரிசு வழங்குதலில் (கவிதை அம்பாறை மாவட்டம்) ஏற்பட்டது போல உறவினர்கள் நடுவர்களாக இருந்து வெற்றியாளர் தெரிவு செய்த நிகழ்வு ஏற்படாது அவதானமாக இருக்க வேண்டும். உண்மையில் மாற்று ஆற்றல் கொண்டவர்களிலிருந்தே தெரிவு நிகழ பிரார்த்திப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .