2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தமிழ் கிராமங்களுக்கு கல்முனை மேயர் விஜயம்; மக்களின் குறைகள் தொடர்பிலும் விசாரிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 03 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று புதன்கிழமை மாலை மாநகர பிரதேசத்திலுள்ள பாண்டிருப்பு, பெரியநீலாவணை, கல்முனை, மணல்சேனை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய தமிழ் கிராமங்களிற்கு நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அப்பிரசேங்களில் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளையும் பார்வையிட்டார்.

குறிப்பாக பாண்டிருப்பில் எல்லை வீதி, கடந்த முறை ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த கடற்கரை வீதி, பொது நூலகம், சேனைக்குடியிருப்பு முருகன் கோயில் வீதி, வனவாச குறுக்கு வீதி, கல்முனை உடையார் வீதி, நற்பிட்டிமுனை பிள்ளையார் கோயில்முன் வீதி, மணல்சேனை வில்லியம் வீதி, பெரியநீலாவணை சரஸ்வதி மகா வித்தியாலய வீதி என்பவற்றை பார்வையிட்டதுடன் அவ்வீதிகளில் தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்றுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்தார்.

இதேவேளை சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத் திட்டத்திலுள்ள மக்களின் குடிநீர்ப் உள்ளிட்ட பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இவ்விஜயத்தின் போது மாநகர சபையின் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், வீ.கமலதாஸன், ஏ.விஜயரெட்னம், எஸ்.ஜெயக்குமார், ஆணையாளர் ஜே.லியாக்கத்தலி, பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, பிரத்தியேகச் செயலாளர் ஏ.எல்.எம்.இன்ஸாட், பொதுச் செயலாளர் ஏ.பீர்முஹம்மட் ஆகியோர்களும் முதல்வருடன் சென்றிருந்தனர்.  


You May Also Like

  Comments - 0

  • kulathooran Thursday, 03 November 2011 07:25 PM

    மேயரினது களநிலவர செயற்பாடு பாராட்டுக்குரியது. ஆசிய பௌண்டேசன் மூலம் கிடைத்த நிதி மூலம் முதல் வேலையாக 'கேட் வே'யை வருணம் பூசி கல்முனை மாநகர் அன்புடன் வரவேற்கிறது குறிப்பிட்டு தென் எல்லையையும் வடஎல்லையில் 'கேட்வே' ஒன்றும் அமைத்து எல்லையை வரையறை செய்யவும்.

    Reply : 0       0

    mbm Thursday, 03 November 2011 08:16 PM

    குளதூரான் சரியா சொன்னீர்கள். இந்த எல்லை தெரியாமல்தான் நிறையபேர் விதண்டாவாதம் பேசுகிறார்கள்! ஒரு கேள்வி கேட்கட்டுமா? மேயர் அவர்களே... நீங்க பார்வையிட்ட இடத்திலுள்ள பிரச்சின எல்லாம் தீர்க்கும் வேலைய எப்போ ஆரம்பிக்க போறீங்க?

    Reply : 0       0

    makkal 1st Friday, 04 November 2011 05:18 AM

    பாராட்டுக்கள். எனினும் குறித்த வேலைகள் முடிந்து மக்களிடம் கையளிக்கும் போது செய்தியாக வந்தால் நல்லது ,எல்லோரும் சென்று மக்களின் பிரச்சினையை பார்க்க முடியும் ஒரு சிலரால் மட்டுமே தீர்க்க முடியும் பொறுத்திருந்து பார்ப்போம் .. இது எந்த வகை என்று ..

    Reply : 0       0

    uooran Friday, 04 November 2011 06:28 PM

    மேயர் போறபோக்கு நல்லாத்தான் இருக்கு.
    பணிவான வேண்டுகோள். மேயர் அவர்கள் தொடராக ஒரே கலரில் சேட் அணிகிறீர்கள், பச்சை மஞ்சளாக மற்றக்கூடாதா?

    Reply : 0       0

    pasha Friday, 04 November 2011 09:56 PM

    புது துடைப்பன் தூக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .