2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மர நடுகை நிகழ்வு

Super User   / 2011 நவம்பர் 06 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் கல்முனை நகர லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மர நடுகை நிகழ்வொன்றினை நடத்தினர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல். மனாப், எஸ்.எல்.முனாஸ், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் கலாநிதி எம். கோபாலரட்ணம், கல்முனை நகர் லயன்ஸ் கழகத் தலைவர் கே. பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்முனை நகர லயன்ஸ் கழகத தலைவர் இதன்போது இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்ளூ

'இயற்கையினை பாதுகாப்பதோடு, ஓசோன் படையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சீர்செய்வதற்காக - இன்று உலகம் முழுவதும் மரங்களை நடும் திட்டத்தினை லயன்ஸ் கழகம் முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில், உலகளாவிய ரீதியிலுள்ள 12 லட்சம் லயன்ஸ் அங்கத்தவர்களும் ஆளுக்கொரு மரக் கன்றினை நட வேண்டுமென எமது கழகத்தினால் சர்வதேச தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, கல்முனை நகர் லயன்ஸ் கழகம் இவ்வருடம் 5,000  மரக்கன்றுகளை நடும் திட்டமொன்றினையும் முன்னெடுத்து வருகிறது.

அத்திட்டத்திற்கிணங்கவே, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் வேண்டுகோளின்படி இன்று நாம் அட்டாளைச்சேனை பிரதேச சபையுடன் இணைந்து இந்த மர நடுகை நிகழ்வினை மேற்கொண்டுள்ளோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • avathaani Sunday, 06 November 2011 09:02 PM

    கல்முனை லயன்ஸ் தலைவர் கல்முனை நகரில் நடவுள்ள 5000 மர கன்று நடுகை திட்டத்தில் கல்முனை மக்கள் வங்கி முன்பாகவும் மரக்கன்றுகளை நடவும். ஏற்கனவே இருந்த மரங்கள் மூர்க்கமாக வேரோடு தரிக்கபட்டதால், நிழலுக்கு ஒதுங்கும் பிரயாணிகளும், வயோதிபர்களும் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    Reply : 0       0

    jes Monday, 07 November 2011 04:27 AM

    நல்லதொரு முன்மாதிரி, ஒவ்வொரு மனிதனும் தனக்கொரு மரம் நட்டு வளர்க்க வேண்டும், மரம் நடுவதும் மாநபி வழிதான். சூழலை பாதுகாக்கும் vidayaththil நமவர்கள் suththa சூனியம்.

    Reply : 0       0

    SIRAJ Monday, 07 November 2011 05:50 AM

    வாழ்த்துக்கள் நல்ல செயல் மரம் எதுக்கும் தேவை. உங்கள் கட்சிக்கும் மரம்தானே தேவை. அதனால் அட்டாளைச்சேனை மூவரும் சேர்ந்து மரம் நாட்டுங்கள் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    நண்பன் Monday, 07 November 2011 11:10 PM

    சேவைகளைத்தான் மக்களும் எதிர்பாக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    haniffa Tuesday, 08 November 2011 06:23 PM

    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    safa Tuesday, 08 November 2011 11:28 PM

    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .