Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 08 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப் நகர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு யானைகளின் தாக்குதலுக்குள்ளாகி வீடொன்று பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளது.
அப்துல் சலாம் முஹம்மது முஸ்தபா என்பவரின் வீடே – யானைகள் தாக்கியதில் இவ்வாறு சேதத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் குறித்து முஸ்தபாவின் மனைவி விபரிக்கையில்,
'நேற்று இரவு 8.00 மணியிருக்கும். நாங்கள் வீட்டிலிருந்தோம். அப்போது எங்கள் வளவுக்குள் மூன்று யானைகள் நுழைந்தன. அவற்றில் இரண்டு யானைகள் எங்கள் வீட்டினை இடித்துத் தள்ளியதோடு, சுற்றியிருந்த மரங்களையும் வேறோடு பிடிங்கி எறிந்தன.
நல்ல வேளையாக, நாங்கள் அருகிலிருந்த வீட்டுக்குத் தப்பிச் சென்று விட்டோம். முன்னரும் எங்கள் வீடு யானைகளால் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கான எவ்வித நஷ்டஈடுகளும் எமக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் மீண்டும் யானைகளால் எமது வீடு அழிவடைந்துள்ளது' என்றார்.
இதேவேளை, அஷ்ரப் நகர் பகுதியில் யானைகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தமக்கு தகுந்த பாதுகாப்புகளை வழங்கும்படி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
pasha Wednesday, 09 November 2011 10:04 PM
அஷ்ரப் நகர மக்கள் நேற்று ஆர்பாட்டம். இன்று யானைகள் வரவு, ராணுவ முகாம் அமைப்பதை நியாயப்படுத்தும் நிகழ்வு?
Reply : 0 0
ummpa Wednesday, 09 November 2011 11:18 PM
Pasha,
உண்மைதான். இதற்கு நாம் என்ன செய்வது. எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் மந்திரிகள் இருந்தும் பயன் கிடைக்காமல் நாங்கள்.
Reply : 0 0
mbm Thursday, 10 November 2011 03:30 PM
பூச்சாண்டி காட்ட முஸ்லிம் அமைச்சர்களும் எம்பி மார்களும் வருவாங்களே... பூதாகரமாக பேசி நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம் என்று சொல்வாங்களே.. இன்னும் அவர்களை நம்ப போறிங்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
51 minute ago
2 hours ago