Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 10 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்படும் துறைமுகத்தினால் ஒலுவில் கிராமம் அழிவடையும் ஆபத்துள்ளது என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பைசால் காசீம் தெரிவித்தார்.
சுற்றாடல் திணைக்களத்தினால் ஒழுங்கான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படாமையே இந்நிலைக்கு பிரதான காரணமாகும் என அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக ஒலுவில் கிராமத்திற்கு அண்டிய பிரதேசங்களான அட்டப்பளம் மற்றும் நிந்தவூர் போன்ற பிரதேசங்களும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களில் கடல் நீர் புகுந்துள்ளது என அவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து கடலரிப்பினை தடுப்பதற்காக கற்பாறை அணை அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
இந்த கடலரிப்பின் காரணமாக குறித்த பிரதேச மக்கள் விவசாய ரீதியாகவும் கடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு தொழில்களை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டு கொடுப்பனவுகளும் இதுவரை வழங்கப்படவில்லை என பைசால் காசீம் தெரிவித்தார்.
இதேவேளை, அஷ்ரப் நகர் பிரதேசத்தில் காட்டு யானைகளை தடுப்பதற்காக வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒழுங்கான முறையில் மின் வேலிகள் அமைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதனாலேயே குறித்த மின் வேலிகளை தகர்த்து யானைகள் உட்பிரவேசிக்கின்றன. இந்த யானைகள் அஷ்ரப் நகர் மாத்திரமன்றி அட்டப்பளம் பிரதேசத்தினுள் தற்போது நுழைகின்றன என அவர் குறிப்பிட்டார்.
குறித்த மின் வேலிகள் அமைக்கும் பணி அட்டளைசேனை மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் மேலும் தெரிவித்தார்.
pasha Friday, 11 November 2011 06:00 PM
முன்னாள் அமைசரின் முதிர்சியற்ற தீர்மானத்தால் வந்த விணை. ஒலுவில் துறைமுகத்தில் எத்தனை கப்பல்கள் வந்துள்ளன? அம்பாந்தோட்டை துறைமுகமும் இதை போன்றதே.
Reply : 0 0
ullooran Friday, 11 November 2011 07:48 PM
pasha ! நீங்க முன்னாள் அமைச்சர் என்று யாரைக்குரிப்பிடுகிரீர்கள்...?
Reply : 0 0
nasirahamed_lecturer_ninthavur Friday, 11 November 2011 08:14 PM
ஹஹா ..... இவரின் கதை அது ......... ஹ ஹ
Reply : 0 0
mbm Friday, 11 November 2011 08:15 PM
அறிக்கை எல்லாம் நல்லாத்தான் இருக்கு! அவசர உதவி எங்கே எம்பி அவர்களே... அதை செய்யுங்க முதல்ல!
Reply : 0 0
avathaani Friday, 11 November 2011 10:35 PM
எம்.பி.அவர்களே இப்பதான் கண் முழிச்சிங்களா? குதிரை படையினர் அக்கரைப்பற்றை அபிவிருத்தி செய்கையில்இ யானைப்படை பலமுள்ள நீங்கள் என்னதான் செய்கிறீர்கள்? மின் வேலிகளை அமைப்பதிலாவது உதவக்கூடாதா?
Reply : 0 0
hameed Saturday, 12 November 2011 01:48 AM
அமைச்சர் அவர்களே வயல் நிலங்களுக்குள் கடல் நீர் வந்தால் உப்பளங்கள் அமைக்கலாமே அதற்கு உதவலாமே?
Reply : 0 0
Saleem khan Saturday, 12 November 2011 07:52 AM
வாழ்த்துகிறோம் சொன்னதுபோல் நிச்சயமாக இந்த வேலைகளை செய்து முடித்தால் மக்கள் நன்மை அடைவார்கள், நன்று.
Reply : 0 0
Anwer Noushard Saturday, 12 November 2011 11:55 AM
இங்கும் Pashaa தனது காரியத்தை பதிவு செய்துள்ள விதம் சிந்திக்க வைக்கின்றது. முன்னாள் அமைச்சர் என்று நீங்க குறிப்பிடுபவர் தானுங்க முஸ்லிம்களுக்கும் அரசியல் தெரியும் என்பதை இந்த நாட்டிற்கு தெளிவு படுத்தியவர். உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ முடியலனா... அத நீங்க விமர்சிக்கும் விதம் எட்டிப் பார்க்கும் நரிக்கு ஏலாட்டி புளிக்கிற கதையா இருக்கே.
Reply : 0 0
safa Saturday, 12 November 2011 05:35 PM
இவ்வளவு நாளும் என்ன ..... இருந்தார்களோ தெரியல்ல, முடியும் தருவாயில் இப்படியொரு... மேலும் பாஷா முன்னாள் அமைச்சர் .... இது ரொம்ப தவறு கொஞ்சம் பார்த்து பேசலாமே.
Reply : 0 0
faizmohamed Saturday, 12 November 2011 09:22 PM
உங்கள் முடிவு
Reply : 0 0
rauf Thursday, 19 January 2012 06:12 AM
ippothuthan kan vilitharo?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago