2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'வடக்கு கிழக்கு அரச நிலங்கள் தனியார், அரச தரப்புகளுக்கு வழங்கப்பட மாட்டாது'

Super User   / 2011 நவம்பர் 12 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கிலுள்ள அரச காணிகள் அல்லது பாதுகாக்கப்பட்ட வன பகுதிகள் தனிநபர்களுக்கோ அரச தரப்புகளுக்கு வழங்கப்பட மாட்டாது என சுற்றாடல்வளத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அஷ்ரப் நகர் கிராமத்தில் அமைக்கப்படும் இராணுவ முகாமை அகற்ற கோரி கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோது, குறித்த பிரதேசத்தில் அரச அல்லது தனியார் கட்டிடங்களை ஸ்தாபிப்பதற்கு தனது அமைச்சு அனுமதி வழங்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

'எனினும் தேசிய தேவைக்காக இராணுவ முகாம் அமைப்பதற்கு சிறு துண்டு நிலமொன்றை தரும்படி பாதுகாப்பு அமைச்சு கோரினால் நாம் அதை கருத்திற் கொள்வோம்' என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பள்ளிக்காடு பிரதேசத்திலுள்ள அரச நிலங்களை தமது நிலங்கள் என ஒவ்வொரு வருடமும் சிலர் தெரிவிப்பதாக அம்பாறை மாவட்ட வனத்துறை அதிகாரி லலித் கமகே தெரிவித்தார்.

'இந்த மக்கள் குறித்த நிலத்திற்கு போலியான ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனர். இதற்கு ஏதிராக மாவட்ட செயலாளரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்' என அவர் குறிப்பிட்டார்.

'மேற்படி இராணுவ முகாம் அரசாங்க காணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் புராதன மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள் உள்ளன. இவற்றை வருடம் முழுவதும் பாதுகாக்க வேண்டியுள்ளது. இதனால்தான் இராணுவ முகாமொன்று ஸ்தாபிக்கப்பட்டது' அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • UMMPA Saturday, 12 November 2011 05:22 PM

    இது எப்படி இருக்கு காங்கிரஸ் தலைவர் அவர்களே! . நீங்க சொன்னதுக்கு அங்கு பதில் கிடைக்கிறது . முதல் இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணவும். அடிக்கடி நிலத்தை பிடிப்பதிலே பெரும்பான்மை மக்கள் கண்ணா இருக்கிறார்கள் .

    Reply : 0       0

    faizmohamed Saturday, 12 November 2011 09:18 PM

    தலைவர் அதவுல்லா எங்க?

    Reply : 0       0

    meenavan Saturday, 12 November 2011 11:27 PM

    நீதி அமைச்சருக்கு அமைச்சர் யாப்பா சாட்டையடி. அஸ்ரப் நகர் வாசிகளே அடுத்த தேர்தல் வரை பொறுமை காப்பதற்கு அரசாங்கம் இடம் வைக்காது. உங்களுக்காக அனுதாபம் கொள்வதை விட வேறு வழியில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .