2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அஷ்ரப் நகர் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவேன்: ரவூப் ஹக்கீம்

Super User   / 2011 நவம்பர் 12 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அஷ்ரப் நகரிலுள்ள சர்ச்சைக்குரிய காணிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அஷ்ரப் நகர் மக்களிடம் இன்று சனிக்கிழமை உறுதியளித்தார்.

அதேவேளை, குறித்த காணிகள் தொடர்பான சர்ச்கைகளுக்கு முடிவு காணுவதற்கு முன்னதாக அங்குள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டும் வெளியேற தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

அஷ்ரப் நகரின் சர்ச்சைக்குரிய காணிகளை அமைச்சர் ஹக்கீம் இன்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட போதே மேற்கண்ட வாக்குறுதியினை வழங்கினார்.

இதேவேளை,  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் அங்கு முகாம்களை அமைத்துள்ள இராணுவ அதிகாரிகளையும் அமைச்சர் அழைத்து பேசினார்.

இதன்போது, மாவட்ட செயலாளரால் அரச காணிகள் என தமக்கு அடையாளம் காட்டப்பட்ட இடங்களிலேயே தாம் இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக அங்கு வருகை தந்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் மக்கள் கலவரப்பட்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்ட அமைசர் ஹக்கீம், இது தொடர்பில் தீர்வொன்றினை தான் விரைவில் பெற்றுத் தருவேன் எனவும் மக்களிடம் உறுதியளித்தார்.

இதன்போது, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ், என்.எல். யாசிர் ஐமன், உள்ளிட்ட பலர் சமூகமளித்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி: அஷ்ரப் நகரில் அமைச்சர் ஹக்கீம்...


You May Also Like

  Comments - 0

  • polathavan Sunday, 13 November 2011 03:14 PM

    வெரி குட் சார். உங்கள பத்தி தப்பா குறை கூறினவங்களுக்கு நல்ல பதிலடி கொடுத்துட்டிங்க சார். தேங்க்ஸ்.

    Reply : 0       0

    safa Sunday, 13 November 2011 04:59 PM

    இதுல என்ன வில்லங்கம் இருக்கோ தெரியல்லையே... அரச காணிகள் என்று சொல்லப்படும் இடத்தை சுற்றி பார்த்ததாக சொல்லிருக்கு செய்தி... ஏதாவது உள்குத்து இருக்குமோ? மக்களே மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள்... ஏதோ நல்லது நடந்தால் சரி... எமது இடம் மீண்டும் எமக்கே கிடைத்தால் அது போதும் கிடைக்கும் வரை ஓயாதீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .