2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்களின் மீள்நியமனங்களை நிறுத்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 13 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீளவும் சேவையில் அமர்த்தும் நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆளுநரின் செயலாளர் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,  கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியான சேவைக்குரிய உத்தியோகத்தர்களுக்கான மீள்நியமனம், பதவி உயர்வு, சேவைநீடிப்பு என்பன பொதுச்சேவை ஆணைக்குழுவுக்குரிய அதிகாரங்களாகும். ஆனால் இவ்வதிகாரம் மாகாணசபைக்கு கையளிக்கப்படவில்லை. அத்துடன் பொதுச்சேவை ஆணைக்குழு மீண்டும் கடந்த ஜுன் மாதம் முதல் 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய இயங்க ஆரம்பித்துள்ளதனால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

ஆளுநரின் தீர்மானத்திற்கமைய வலயக்கல்வி பணிப்பாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் எவரும் நியமிக்கப்படமாட்டார்கள். அத்துடன், ஏற்கெனவே வழங்கப்பட்ட மீள்நியமனங்கள் யாவும் இந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள் எவரும் மீள்நியமனம் செய்யவேண்டிய நிலைமையேற்படின் மத்திய அமைச்சரவையின் அனுமதிக்கமைய பொதுச்சேவை ஆணைக்குழு மீள்நியமனங்களை வழங்கும். எனினும் நிறுவனத் தலைவர்களாக ஒப்பந்த அடிப்படையில் எவரும் நியமனம் செய்யப்படமாட்டார்களெனவும் என்.ஏ.ஏ.புஸ்பகுமார குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .