2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஆலயங்களுக்கு ஒலிபெருக்கிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 11 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பட்டைக் கிராமத்திலுள்ள ஆலயங்களுக்கு ஒலிபெருக்கிச் சாதனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவின் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த ஒலிபெருக்கிச் சாதனங்கள் கொள்வனவும் செய்யப்பட்ட ஆலயங்களுக்கு வழங்கப்பட்டன.

ஆலைடியடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தம்பட்டைப் பிரதேசத்திலுள்ள 03 இந்து ஆலயங்களுக்கு மேற்படி ஒலிபெருக்கிச் சாதனங்கள் வழங்கப்பட்டன.

உரிய ஆலயங்களின் பரிபாலனசபையினர், நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஒலிபெருக்கிச் சாதனங்களை பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .