2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட பூஜைகள்

Kogilavani   / 2012 மார்ச் 13 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஜானாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் அந்நிய நாடுகளின்; தீய சக்திகளின் சூழ்ச்சிகளில் இருந்து எமது தாய் நாட்டை  பாதுகாக்க வேண்டுமென்று கோரியும் விசேட பூஜை வழிபாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை கல்முனைப்பிரதேச இந்து ஆலயங்களில் இடம்பெற்றன.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஜெய நானயக்கார தலைமையில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவு அதிகாரி ஆரியவர்த்தனவின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச இந்து சமய ஆலயங்களின் பரிபாலன சபையின் அனுசரனையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், பெரிய நீலாவணை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயம், பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலயம் போன்றவற்றில் இவ்விஷேட பூஜைகள் இடம்பெற்றன.

இதேவேளை, இன்று மாலை கல்முனை முருகன் ஆலயத்திலும் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எல்.நபீல் தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 13 March 2012 04:17 PM

    அழுத்தம், ஆசிக்கு யாசிக்கிறது.....?

    Reply : 0       0

    Kanavaan Thursday, 15 March 2012 02:41 PM

    கடவுளே! இந்நாட்டில் நடக்கும் வெள்ளை வான் கடத்தலுக்கும், கொலைகளுக்கும், விலைவாசி ஏற்றத்திற்கும் ஒரு தீர்வைப்பெற்றுக் கொடுக்கமாட்டாயா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .