2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இ.போ.சபையின் சம்மாந்துறை பஸ் சாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2012 மார்ச் 15 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

 

இலங்கை போக்குவரத்துச் சபையின் சம்மாந்துறை பஸ் சாலை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஆகக் குறைந்த தர ஊழியர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளத்தை 11,730  ரூபாயாக உயர்த்து,  உரிய தினத்தில் மாதாந்த வேதனத்தை வழங்கு, சேமலாப நிதியை உரிய தினத்தில் முறையாக வங்கியில் வைப்பிலிடல், ஒருங்கிணைப்பு என்ற போர்வையில் இலங்கை போக்கு வரத்துச் சபையை அழித்தொழிப்பதை நிறுத்தல், நிதி ஏற்பாடுகளை குறைக்காது பொது திரைசேரியின் மூலம் இலங்கை போக்கு வரத்துச் சபைக்கு தொடர்ச்சியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.



 


You May Also Like

  Comments - 0

  • riswan Thursday, 15 March 2012 09:43 PM

    இது ஏற்றுக்கொள்ளகூடிய கோரிக்கை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .