Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 மார்ச் 16 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை வர்த்தக சம்மேளனத்தின் இரண்டாவது வருடாந்த மாநாடு நேற்று வியாழக்கிழமை இரவு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 15 அம்சங்களை கொண்ட கல்முனை மாநகர அபிவிருத்தி பிரகடனம் வெளியீடப்பட்டதுடன் வர்த்தக பிரமுகர்கள் 11 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், பிரதேசத்தின் அவசிய தேவைப்பாட்டுகள் தொடர்பான திட்ட அறிக்கைகள் நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் வர்த்தக சம்மேளன உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளும் விநியோகிக்கப்பட்டன.
கல்முனை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.ஏ.கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பீ.பியசேன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ஜவாத்,, துல்கர் நயீம், கல்முனை மேயர் சிராஸ் மீராஸாஹிப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
munaiyooran. Saturday, 17 March 2012 03:22 PM
கல்முனை அபிவிருத்திக்கு கிடைத்த நல்ல சந்தர்பம்..
வேறுபாடுள்ள அரசியலை ஒரு மேடைக்கு கொண்டு வந்தது பெரும் விடயம்...
Reply : 0 0
jabbar ali Saturday, 17 March 2012 09:32 PM
கல்முனை நகரில் இது ஒரு வரலாறு .... வர்த்தக சமூகமும் பலமாக உள்ளது என்பதை நிருபித்துள்ளனர். நிகழ்வுக்காக உழைத்தவர்கள் பாராடுக்குரியவர்கள். ..
Reply : 0 0
meenavan Sunday, 18 March 2012 12:52 AM
மாநகர சபை உறுப்பினர்களும் பங்குபற்றியிருப்பின், சம்மேளன மாநாடு மகுடம் சூடியதாக அமைந்திருக்கும். பாராட்டுகள்.
Reply : 0 0
A.m.kamaldeen, kalmunaikudy Sunday, 18 March 2012 05:17 AM
மீனவன் ....
இரண்டாவது வரிசையில் இருப்பவர்கள் யார் என்பதை நன்றாக பார்க்கவும். அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டனர், சிலர் வராமல் விட்டதற்கு யார் பொறுப்பு ?
Reply : 0 0
y isath Sunday, 18 March 2012 04:30 PM
செயலாளர் ஜெஸ்மின், தவிசாளர் பசீர் போன்றவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
Reply : 0 0
SLF.Jabbaar Sunday, 18 March 2012 08:38 PM
இசாத், பசீர்,ஜெஸ்மின் இருவருடன் சம்மேளன பிரதித் தலைவரும் ,ஆசியா மன்றத்தின் இணைப்பாளரும் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
Reply : 0 0
SMA. kareem Sunday, 18 March 2012 08:43 PM
கல்முனை வரலாறில் இம்மாநாடு வரலாறில் பொறிக்கப்பட வேண்டியது. வெளியீடு செய்யப்பட்ட பிரகடனம் பலே ......
Reply : 0 0
Bussiness community Monday, 19 March 2012 05:43 AM
இதற்கு வழிகாட்டிய ஆசிய மன்றத்திற்கு வர்த்தக சமூகத்தின் இதயபூர்வமான நன்றிகள்.
Reply : 0 0
MM.Kabeer,kalmunaikudy Monday, 19 March 2012 01:22 PM
இம்மாநாட்டின் பிரகடனமும், இரண்டு எம்பிக்களிடமும், முதல்வரிடமும் அபிவிருத்திக்காக கொடுக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றை நிறைவு செய்தால் கூட உண்மையாகவே பெரும் சாதனை.
Reply : 0 0
M.C.M.Aboobacker Monday, 19 March 2012 01:34 PM
தலைவர் அஷ்ரப் காலதில் முடியாது என்ற ஒரு விடயம் ஆசிய மன்றத்தின் வழிகாட்டலுடன், வர்தக பிரமுகர்களின் செயலூக்கம் காரணமாக நல்ல பயனை கண்டுள்ளது. உதவி செய்தோர் பாராட்டுகுரியவர்கள்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago