2025 ஜூன் 26, வியாழக்கிழமை

குறைந்தளவு கூலி வழங்கப்படுவதால் விசனம்

Kogilavani   / 2012 மார்ச் 17 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை கல்மடுவ பகுதியில் கரும்பு அறுவடையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தளவான கூலி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு கரும்பு அறுவடையில் ஈடுபடும் தொழிலாளர் ஒருவருக்கு நாட்கூலியாக 475 ரூபாவே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் சிலர் கவலை தெரிவித்தனர்.

இப்பகுதியில் சுமார் 159 ஹெக்ரயர் நிலப்பரப்பில் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அறுவடை செய்யப்படும் கரும்புகள் ஹிங்குறான சீனி உற்பத்தித் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சாதாரணமாக, வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாழியொருவருக்கு இப் பகுதியில் நாட்கூலியாக 800 ரூபாய் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • ahamed Monday, 19 March 2012 01:54 AM

    கரும்பு தின்ன கைக்கூலி வேண்டுமா இல்லை. ஆனால், கரும்பு வெட்ட நியாயமான ஊதியம் கொடுக்க வேண்டும்.

    Reply : 0       0

    user Tuesday, 20 March 2012 06:15 AM

    எல்லாம் நம் நாட்டுக்கு பிற நாடுகள் செய்கின்ற கொடுமை ...................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .