Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 17 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கல்முனைப் பிரதேசத்தில் கனரக வாகன சாரதியிடம் 200 ரூபாவினை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸாரை இன்று சனிக்கிழமை காலை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இருவரும் கல்முனை தாளைவெட்டுவான் சந்தியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் மண் ஏற்றி வந்த கனரக வாகனத்தை இடைமறித்து 200 ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.
வாகனத்தில் பயணித்த நபர் தனது பெயரை குறித்த பணத்தில் கையொப்பமாக இட்டு வழங்கியதுடன் இச்சம்பவம் குறித்தது பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பொலிஸார் மேற்படி இருவரையும் கைது செய்துள்ளதுடன் லஞ்சமாக வாங்கிய பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவத்தில் கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
abdul salam Saturday, 17 March 2012 10:31 PM
இதுதான் புத்திசாலிதனமான ஆப்போ. நன்றி சாரதியாரே.
Reply : 0 0
SLM Sunday, 18 March 2012 12:25 AM
எல்லோரையும் 'அவர் என்ன சும்மா டிரைவர் தானே' என்று தப்பு கணக்கு போடா அதுதான் மிகப் பெரிய தப்பு....
Reply : 0 0
hameed Sunday, 18 March 2012 02:00 AM
சுறாக்கள் இருக்கின்றன ,பாவம் சாலை மீன் மாட்டிகொண்டது.
Reply : 0 0
JABEER Sunday, 18 March 2012 04:41 AM
இதுபோன்று இன்னும் இவர்களை பிடித்து கொடுக்கனும் பொது மக்களே .
Reply : 0 0
ஜெமீல் ஓட்டமாவடி Sunday, 18 March 2012 02:55 PM
இரண்டு போ்கள்தான் வெளிக்கொணரப்பட்டுள்ளார்கள், ஆனால், நாட்டில் வாங்குபவா்களின் எணணிக்கையைக் காண்பதென்றால் இலட்சத்தால் பெருக்க வேண்டும்.
Reply : 0 0
ashraff Sunday, 18 March 2012 04:03 PM
மாஷா அல்லாஹ் தைரியசாலி. வாழ்க தொடர்க.
Reply : 0 0
Lion Sunday, 18 March 2012 05:38 PM
சார் இது நமக்கு நாம வைச்ச ஆப்பு. அவங்களை பஹைச்ச நமக்குத்தான் ஆப்பு. இது உயர் அதிகாரிகள் பார்க்க வேலை. இதை நாம பார்த்தல் நமக்குத்தான் கஷ்டம்.
Reply : 0 0
easternbrother Sunday, 18 March 2012 06:49 PM
ஹலோ மிஸ்டர் LION , பெயருக்கும் உங்க கருத்துக்கும் சம்பந்தமே இல்லை....பெயரை CHICKEN என மாற்றி வையுங்கள்........ஐயோ ஐயோ......
Reply : 0 0
அன்பாளன் Sunday, 18 March 2012 10:15 PM
இலங்கையிலும் அதிசயம். வாழ்க எங்கள் மக்கள்.
Reply : 0 0
Well Wisher Monday, 19 March 2012 05:46 PM
முயற்சி தொடரட்டும்
Reply : 0 0
Hassan Monday, 19 March 2012 06:31 PM
குட் job
Reply : 0 0
kiyas Monday, 19 March 2012 08:07 PM
எல்லாம் சரி, நம்மட மக்கள் காசு கொடுக்க ரெடியா இருக்கும் போது, அவர்கள் வாங்காம இருப்பாங்களா? முதலில் நம்மட மக்கள் காசு கொடுக்காம இருந்தா சரி,
Reply : 0 0
uooran Thursday, 22 March 2012 11:53 PM
இனியாவது திருந்துங்க
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago