2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'கல்முனை தமிழ் பிரதேசத்திற்கென தனியான பிரதேச சபையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்'

Super User   / 2012 ஜூலை 12 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை தமிழ் பிரதேசத்திற்கென தனியான பிரதேச சபையை பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற சிவில் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்நது உரையாற்றிய அவர்.

"கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் இன்னுமொறு பிரதேச சபை உருவாகுவதால் துரிதமாக எல்லா பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்யலாம். ஆகவே தனியான தமிழ் பிரதேச சபையொன்று அவசியமாகும். இது தொடர்பாக இதுவரைக்கும் எந்த புத்திஜீவிகளும் இதைப்பற்றி சிந்திக்கவில்லை.

அவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டார்கள் அதனால் நான் கூறுகிறேன் இது காலத்தின் தேவையாகும். இப்பிரதேச சபைக்குள்ளும் அனைத்து இன மக்களும் உள்ளடங்ப்படுவது சிறப்பம்சமாகும். காதத்திற்கு காலமாக தமிழ் மக்களை துண்டிவிட்டு அதை வேடிக்கை பார்ப்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கெள்ளாம் இந்த நல்ல சிந்தனைகள் வருவதில்லை.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்குள் 29 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுவதுடன் 360,00த்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களும் வாழும் இப்பகுதிக்கு ஏன் தனியான ஒரு பிரதேச சபை இருக்கக்கூடாது.

ஆகவே இவ்விடயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்னர் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுடன் கலந்துரையாடி தனியான தமிழ் பிரதேச சபையொன்றைக் கொண்டு வருவதுடன் இப்பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்தித் தருவது எனது சொந்தப் பொறுப்பாகும்" என்றார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் க.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹானூன் டொல் உட்பட பிரதேசத்தின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • kamedian Saturday, 14 July 2012 01:12 PM

    சும்மா போங்க சேர், காமெடி பன்னாம‌.

    Reply : 0       0

    kamedian Saturday, 14 July 2012 04:26 PM

    நடக்காது,

    Reply : 0       0

    kandan Saturday, 14 July 2012 04:33 PM

    புளித்து போச்சு கதை கேட்டு.

    Reply : 0       0

    kandan Saturday, 14 July 2012 05:02 PM

    என்ன சாரு, எங்கள வைத்து காமடி கீமடி பன்னலயே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .