2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்தாலோசிப்பு

Kogilavani   / 2012 ஜூலை 14 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)
'தெயட்ட கிருல' வேலை திட்டத்திற்கமைவாக கல்முனை பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட 183மில்லியன் ரூபா நிதியினை கொண்டு பிரதேச அபிவிருத்தியை எவ்வாறான வேலைத்திட்டங்களின் ஊடாக மேற்கொள்வது என்பது தொடர்பாக கல்முனை பிரதேச அபிவிருத்தி சபை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

கல்முனை பிரதேச அபிவிருத்தி கூட்டம் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை, கல்முனைக்குடி பிரதேசத்திற்கு 97மில்லியன் ரூபாவும், மருதமுனை பிரதேசத்திற்கு 60மில்லியன் ரூபாவும், நற்பிட்டிமுனை பிரதேசத்திற்கு 20மில்லியன் ரூபாவும், கல்முனை முதலாம் பிரிவு இஸ்லாமபாத்திற்கு 6மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிதியினூடாக 'தெயட்ட கிருல' வேலைத்திட்டத்தை நினைவு கூறக்கூடிய பிரதேசத்தின் மிக அவசியமான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதுடன் இவை அனைத்தும் 2013 பெப்ரவரி மாதத்திற்குள் நிறைவுசெய்யப்பட உள்ளது.

திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனை பிரதேச அபிவிருத்தி சபைத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராஸாஹிப், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்டீன், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உட்பட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்முனை பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 14 July 2012 09:24 AM

    தேர்தல் நெருங்கினால் அபிவிருத்தி தேர்தல் முடிந்தால்.......? ஏழு மாத காலத்தினுள் 183 மில்லியன் ரூபா நிதியும் உரிய முறையில் பயன்படுத்தபடும் என்று ஆறுதல் அடையலாமா? கல்முனை, கல்முனைக்குடி அபிவிருத்தியின் 97 மில்லியன் ரூபா நிதியில் அஸ்ரப் ஞாபாகார்த்த ஆசுபத்திரி அபிவிருத்திக்கு எவ்வளவு தொகை பிரதேச அபிவிருத்தி சபை தலைவரினால் ஒதுக்கப்பட்டுள்ளது? ஆயுள் வேத வைத்தியசாலை அபிவிருத்தி நிதி, அஸ்ரப் வைத்தியசாலை நிதியினை மிகைத்து விடுமா? ஒதுக்கப்பட்ட நிதி விபரங்கள் நிறுவன ரீதியாக வெளியடப்படும் தானே? தமிழ் மிரர் செய்தியை தணிக்கை செய்யாது தானே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .