2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அஷ்ரப் வைத்தியசாலை ஊழியர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நிலவிய குழப்ப நிலைக்கு சுமூகமான தீர்வு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஊழியர்கள் அண்மையில் தாக்கப்பட்டமை தொடர்பில் நிலவிய குழப்ப நிலைமையை சமரசமாக தீர்த்து வைக்கும் முயற்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஊழியர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டன ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

சர்வசமய அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.நஸீர் தலைமையில் இச்சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உட்பட தாக்குதலுடன் சம்மந்தப்பட்ட எதிர்த்தரப்பினர்களும் இச்சமரச முயற்சிக்கான  கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இறுதியில் இரு சாராருக்கும் இடையில் சமரசம் காணப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X