2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சட்ட விரோதமாக சிகரெட்களை வைத்திருந்தவருக்கு அபராதம்

Thipaan   / 2015 ஜனவரி 31 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனையில், தடை செய்யப்பட்ட கோல் சீல் ரக சிகரெட்களை சட்ட விரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும் மாவட்ட நீதவானுமாகிய ஏ. அலக்ஸ்ராஜா, வெள்ளிக்கிழமை (30),  1, 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

கோல் சீல் ரக சிகரெட்களை விற்பனைக்காக வைத்திருந்த நிலையிலேயே அக்கரைப்பற்று பொலிஸாரால், குறித்தநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் அபராதம் விதித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X