2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அக்கரைப்பற்று விபத்தில் ஐவர் படுகாயம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று-பொத்துவில் பிரதான வீதியின் 40ஆம் கட்டை எனும் இடத்தில் இன்று (14) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X