2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சட்டவிரோதமாக கடல் மணல் ஏற்றிய இருவருக்கு தண்டம்

Thipaan   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடல் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு நபர்களுக்கு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல், திங்கட்கிழமை தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

இரு உழவு இயந்திரங்களில் மணல் அகழ்வதாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு, வெள்ளிக்கிழமை (17) மாலை இரகசிய கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்தபோது இரு சந்தேக நபர்களும் தப்பியோடியுள்ளனர்.

பின்னர் இரு சந்தேக நபர்களும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து திங்கட்கிழமை(20) அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X