2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் ஆட்டோ சாரதிகள் சங்க புதிய நிர்வாகிகள் தெரிவு

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் ஆட்டோ சாரதிகள் சங்க 2015ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகிகள் தெரிவு செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (26) ஏறாவூர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றதாக புதிய தலைவர் எச்.எம்.எம். லாபீர் தெரிவித்தார்.

வழமைக்கு மாறாக இம்முறை வாக்கெடுப்பின் மூலமே நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

புதிய தெரிவின்படி, தலைவர் எச்.எம்.எம். லாபீர், உப தலைவர் பி. டொனி ஓட்ஸ், செயலாளர் எஸ்.ஐ. றியால்தீன், உப செயலாளர் எஸ்.எம். தாஹிர், பொருலாளர் எஸ்.எல். வாஜித் அத்துடன் 11 பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாகத் தெரிவின்போது ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரியும் பிரசன்னமாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .