2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் உத்தவிட்டுள்ளார்.

கல்முனைப் பிராந்திய மது வரி திணைக்களத்தின் அதிகாரிகள் மேற்காண்ட திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, நேற்று (28) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .