Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மே 02 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அரசியல் அதிகாரம் கிடைத்தவுடன் நான் என்ற மமதையுடன் சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மாகாண அமைச்சராக நான் பதவி வகித்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எவரையும் பழிவாங்கியதில்லை. ஆனால், சிலர் பொய்யான பிரசாரம் செய்து அரசியில் இலாபம் தேட முட்படுகின்றனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்
அங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்,
உலகில் வாழ்ந்து மறைகின்ற எல்லோரும் மக்களால் நினைவு கூறப்படுவதில்லை. மாறாக மக்களுக்காக சமூக உணர்வுடன் பணி புரிபவர்களே என்றும் மக்களால் போற்றப்பட்டு வாழ்த்தப்படுகின்றனர்.
தியாக உணர்வுடன் நற்பண்புள்ளவர்களாக மக்களுக்கு பணிப்புரிந்த, நமது மூத்த அரசியல் தலைவர்கள், மூத்த கல்விமான்கள், மார்க்க அறிஞர்கள் போன்றவர்களை இன்னும் நாம் நினைத்து பாராட்டிக் கொண்டிருக்கின்றோம்.
அந்தவகையில் பாடசாலைக்கல்வியே ஒரு மனிதனின் வாழ்வில் முக்கிய செல்வாக்கினைச் செலுத்துகின்றது. ஒழுக்கமுள்ள, சிறந்த தலைமைத்துவப் பண்புகளுடன் ஆளுமை மிக்கவர்களாகவும் மாணவர்கள் புடம்போடப்படுகின்ற போது நிட்சயமாக அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்கமுள்ள அரசியல் தலைவர்களாகவும் சமூகப் பெரியார்களாகவும் சமூகத்திற்கு பணி செய்பவர்களாகவும் இருப்பார்கள்
பாடசாலை மாணவர்களை சிறந்த ஒழுக்கமுள்ளவர்களாக கொண்டுவரும் பணிக்கு, பெற்றோர்களும் பக்கபலமாக இருக்க வேண்டும். பாடசாலையுடன் அந்தப் பாடசாலை சமூகம் நெருக்மாகவும் கூடிய அக்கறையுடனும் இருக்கின்ற போதே குறித்த இலக்கையும் சிறந்த அடைவு மட்டத்தையும் காணமுடியும் என அவர் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
03 Oct 2025