2025 ஜூலை 09, புதன்கிழமை

தையல் பயிற்சி நிலையங்கள் திறப்பு

Kogilavani   / 2015 மே 05 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனை பிரதேசத்துக்குட்பட்ட கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களில் தையல்; பயிற்சி நிலையங்களை திறக்கும் நிகழ்வு  நேற்று திங்கட்கிழமை(5) இடம்பெற்றது.

இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அமைக்கப்படுள்ள இந்த பயிற்சி நிலையங்களினூடாக கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60 யுவதிகள் பயன்பெறவுள்ளனர்.

புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சதேச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச நடவடிக்கைகள் பொறுப்பாளர் அன்வர் முஸ்தபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .