2025 ஜூலை 09, புதன்கிழமை

அலைபேசியை திருடியவர் விளக்கமறியலில்

Sudharshini   / 2015 மே 09 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.ஜமால்டீன்

அலைபேசியை திருடிய நபரொருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஸீல், வெள்ளிக்கிழமை(08) 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

அட்டாளைச்சேனை பாலமுனை பிரதான வீதியில் உள்ள அலைபேசி விற்பனை நிலையத்திற்கு சென்ற குறித்த நபர் அங்கு அலைபேசி வாங்குபவர் போல் பாசாங்கு செய்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியை திருடி சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த நபரை கைது செய்து  அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .