Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 09 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, ஒலுவில் பிரதேச தென்னந்தோட்டங்களில் காணப்படும் மயிர்க்;கொட்டிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மயிர்க்கொட்டிகளின் தாக்கத்துக்குள்ளான தோட்டங்களை தெங்கு பயிர்ச் செய்கை சபையின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் எஸ்.சுதந்த தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்டனர்.
தெங்கு ஆராய்ச்சி சபையின் தெங்கு பயிர்ச் செய்கையின் விசேட நிபுணர் மேர்வின் சில்வா உள்ளிட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.
வெளிக்கள ஆய்வாக பாதிக்கப்பட்ட தோட்டங்களை பார்வையிட்டு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை இவர்கள் முன்னெடுத்தனர்.
மயிர்க்கொட்டிகளின் தாக்கத்தினால் தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட தென்னங்காணிகளில் தென்னோலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், அம்பாறை, தெஹ்யத்தகண்டி ஆகிய பிரதேச செயலகங்களிலிருந்து 20 இற்கும் மேற்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நோயை கட்டுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கவுள்ள அதேவேளை, இந்தக் குழு வாரத்துக்கு ஒருமுறை கள ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.
நோய்த்தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்துவகைகளை பெற்றுக்கொள்ளுமாறு புகை விசுறுமாறும் விசேட நிபுணர் மேர்வின் சில்வா ஆலோசனை வழங்கினார்.
28 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago