2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மதுபானம் வைத்திருந்த 07 பேருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூன் 09 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த 07 நபர்களுக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம். பஸீல், இன்று (09) செவ்வாய்க்கிழமை தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த நபர்கள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினைடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த 07 நபர்களையும் நேற்று வியாழக்கிழமை (08) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி இவ்வாறு அபராதம் விதித்துள்ளார். 

இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த ஒருவருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X