2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 10 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, கோணாவத்தை கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளொன்று  இனந்தெரியாதோரினால் நேற்று செவ்வாய்க்கிழமை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளை திருத்துவதற்காக கொண்டுசென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்  எரிவதைக் கண்ட பொதுமக்கள், தீயை  அணைக்க முற்பட்டபோதிலும், அதைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள், சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியுடையது என அதன் உரிமையாளர் ஏ.எம்.ஹுசைன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X