2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் வைத்திருந்த பெண் கைது

Princiya Dixci   / 2015 ஜூன் 10 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அட்டாளைச்சேனை, கப்பலடி கடற்கரை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணை நேற்று செவ்வாய்க்கிழமை (09) அக்கரைப்பற்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோதே அவரிடமிருந்து இரண்டு கஞ்சா பொதிகள் கைப்பற்றிதுடன் பெண்ணையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று புதன்கிழமை (10) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X