Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 10 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனிபா
கிழக்கு மாகாணக் கல்வியமைச்சும் மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகமும் இணைந்து நடத்திய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒரு வருட டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஆசிரியைகளுக்கு டிப்ளோமாச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (09) சாய்ந்தமருது லீ மிர்டியன் ஹோட்டலில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாணக் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், எம்.இராஜேஸ்வரன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், பிரதேச செயலாளர்களான ஏ.எம்.மன்சூர், றிபா உம்மா ஜலீல், அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலைப் பணிப்பாளர் கே.எம்.சுபையிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள 150 பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago