Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 23 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
எந்தத் தேர்தல் முறைமை வந்தாலும் சிறுபான்மைக் கட்சிகள் வழங்கும் ஆலோசனைகள், சிபாரிசுகளை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிடின் நாங்கள் முற்றாக நிராகரிப்போம் என சுகாதார இராஜங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று (23) முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'எந்தத் தேர்தல் முறைமைகள் வந்தாலும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் பாதிப்படையக்கூடாது என்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமரினது நிலைப்பாடக காணப்படுகின்றது.
இருக்கின்ற எல்லைகளுக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இரட்டைத் தொகுதி முறைமை அல்லது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தொகுதி ஆகியவற்றை உருவாக்க முடியும்.
இன்றைய ஆட்சியில் இன, கட்சி பேதம் பார்க்கப்படாமல் ஒற்றுமையுடன் செயற்படக் கூடிய நிலை தோன்றியுள்ளது. இதனால் இன்று மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago